குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின், டார்ஜிலிங் பகுதியில் சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
முதலில், இந்த நிகழ்ச்சி பான்சிதேவா தொகுதிக்குட்பட்ட பிதான்நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடைசியில் இடமாற்றம் செய்யப்பட்டு கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முர்முவுக்கு மேற்குவங்க அரசு சார்பில் சரியான உபசரிப்பு அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மேற்குவங்க அரசுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
















