திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
பஞ்சப்பூர் பகுதியில் வரும் 11ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் இந்தக் கூட்டத்திற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழுவீச்சில் நடைபெறும் இந்த பணிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
ஹெலிபேட் மைதானம், வாகன நிறுத்துமிடங்கள், மேடை அமைக்க இருக்கும் இடம், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தர வாய்ப்புள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
















