சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பெண் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நெடுஞ்சாலை நகரில் அதிமுக புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது அவருக்கு பெண் நிர்வாகிகள் அனைவரும் பூங்கொத்து கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து 40 கிலோ கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டினார்.
















