தமிழகத்தில் டாஸ்மாக், போதை பொருட்கள் நடமாட்டம் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிஐடி நகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், காந்திய மக்கள் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சமூக சேவை, கல்வி, இசை உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு தமாகா சார்பில் கேடயம், பதக்கம் உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதனையடுத்து விழாவில் சிறப்புரையாற்றிய ஜி.கே.வாசன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாட்டில் பெண்கள் அதிக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளாதால் பெண்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
















