ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் எனவும், மோதலின் அடுத்த கட்டம் இன்னும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
தங்கள் வெற்றி முழு உலகிற்கும் அணுசக்தி அச்சுறுத்தல்களை நீக்கும் என்றும் உறுதிப்பட கூறினார்.
அயதுல்லா கமேனியின் ஆட்சி முழு உலகிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள் என கூறிய நெதன்யாகு, ஈரான் 12 அண்டை நாடுகளை தாக்கியதாகவும், ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இஸ்ரேல் ஆதரவாக இருக்கும் எனவும் கூறினார்.
















