நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் தீர்க்க தரிசி நாஸ்ட்ராடாமஸ் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல், பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரானின் தாக்குதல் என மத்திய கிழக்கு போரில் சிக்கியுள்ள நிலையில் உலகமே அச்சத்தில் உள்ளது.
இந்தப்போர் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் 1555-ல் ( Les Propheties ‘லெஸ் ப்ராபெட்டீஸ்’ ) என்ற தனது நூலில் பிரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ், ஏழு மாதப் போர் பற்றி எச்சரித்துள்ளார்.
465 வருடங்களுக்கு முன் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய இந்த நூல் நூறு செய்யுள்கள் கொண்ட தொகுதிகளாக ‘நூற்றாண்டுகள்’ (centuries) என்று அழைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் 26ம் ஆண்டாக இந்த ஆண்டு வருகிறது. எனவே 26-வது செய்யுளில் இந்த ஆண்டில் என்னென்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“ஒரு பெரிய மனிதன் பகலில் ஒரு இடியால் வீழ்த்தப்படுவான்.” என்று நாஸ்ட்ராடாமஸ் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து தேனீக்களின் பெரும் கூட்டம் எழும், அவை எங்கிருந்து வந்தன என்று ஒருவரும் அறிய மாட்டார்கள்.” என்று திரள் ட்ரோன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏழு கப்பல்களைச் சுற்றி போர்க் கப்பல்கள் புறப்படும்; ஒரு மரணப்போர் வெடிக்கும். என்று கூறியுள்ளார். இது சீனா தைவான் போரை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.
இதுபோல பல கணிப்புகளைப் பதிவு செய்துள்ள நாஸ்ட்ராடாமஸ் முக்கியமாக ஏழு மாதம் பெரும் போர், தீமையால் மக்கள் இறந்தனர், மன்னர் தோல்வியடைய மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இது மத்திய கிழக்கில் நடக்கும் ஈரான் போர் வரும் செப்டம்பர் வரை நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியதுடன் ஒத்து போவதாக கருதப் படுகிறது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த போர் அதிகாரத் தீர்மான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் 47-53 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானத்தை தோற்கடித்தனர்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக மத்திய கிழக்கில் என்றென்றும் போர்களால் சோர்வடைந்த அமெரிக்க மக்களுடன் நிற்கிறீர்களா அல்லது ட்ரம்ப் மற்றும் பீட் ஹெக்செத் ஆகியோர் நாட்டை இன்னொரு போருக்குக் கொண்டு தள்ளும் போது அவர்களுடன் நிற்கிறீர்களா?” என்று ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கேள்வியெழுப்பினார்.
ஈரான் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் நிதியிலிருந்து 1 பில்லியன் டாலர் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
















