ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நிலையில், அவரிடம் மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
மணிகண்டனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கௌதம் அவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனிடையே, சென்னையில் உள்ள மணிகண்டன் வங்கி கணக்கில் இருந்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து கொண்டு ஊர் திரும்பியபோது போலீஸ் எனக்கூறி கௌதமை காரில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக கௌதம் அளித்த புகாரில்பேரில் மணிகண்டனை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
















