ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஈரானிடம் தற்போது கடற்படை, விமானப்படை போன்ற எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை என்றும், தொலைத்தொடர்பு சாதனங்களும் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
மேலும், ஈரான் போரில் இருந்த ஆபத்து, மூன்று நாட்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், முதல் இரண்டு நாட்களிலேயே ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்தால், இதுவரை அவர்கள் சந்தித்ததை விட 20 மடங்கு அதிகமான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















