கரூர் விவகாரம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு வரும் 15-ம் தேதி ஆஜராக சம்மன் வந்துள்ளதாக தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செயதியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ விசாரணைக்கு மார்ச் 15-ம் தேதி ஆஜராக சம்மன் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த முறை சென்னையில் விசாரணை நடத்த கோரியதாவும், ஆனால் டெல்லிக்கு வரச் சொல்லியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கரூர் விவகாரத்தில் விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில்பாலாஜி என்றும் அவர் குறிப்பிட்டார்.
















