திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டைச் சேர்ந்த ஜெயராமன் மாநாட்டு திடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அதேபோல் பெரம்பலூரைச் சேர்ந்த சரோஜா மாநாட்டு மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பின்னரே இத்தகவல் தெரியவந்துள்ளது.
















