தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,
திருச்சி அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடியில் பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மணலியில் IOC நிறுவனத்தின் .1,490 மதிப்பிலான மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தமிழகத்தில் 370 கி.மீ நீள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்,
விழாவில் பேசிய பிரதமர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசு பெருமளவு குறையும் என தெரிவித்தார்.
இது 9 லட்சம் குடும்பங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் என்றும், குழாய் மூலம் எரிவாயு நேரடியாக வீடுகளுக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
பாரத் பெட்ரோலியம் நகர எரிவாயு விநியோக வலையமைப்பை அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவது தான் நோக்கம் என தெரிவித்தார். மேலும் தமிழக மக்களின் நலனுக்காக இரவு, பகலாக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
















