வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், ஹோட்டல் சங்கங்கள், கேஸ் நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாற்று சக்தி பயன்பாடு உள்ளிட்ட தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த சலுகையை போர்க்காலம் முடியும் வரை வழங்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
















