பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வந்தடைந்த பயணிகள் ரயிலை தொழில்துறையினர், மற்றும் பாஜகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர்.
பொள்ளாச்சி- பாலக்காடு மார்க்கமாக மெமு பயணிகள் ரயிலை இயக்க கோரிக்கை விடுத்ததை ஏற்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கொச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாசி ரயில் நிலையம் வந்த ரயிலுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல நாள் கோரிக்கையை ஏற்று பாலக்காடு – பொள்ளாச்சி இடையெ இயக்கப்படும் மெமு ரயில் சேவை தங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5 சிறப்பு ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், விருதுநகர் ரயில் நிலையம் வந்த நெல்லை – மங்களூரு விரைவு ரயிலை பாஜகவினர் மலர் தூவி வரவேற்றனர்
நெல்லையில் இருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், விருதுநகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவினர் மலர் தூவி ரயிலை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
















