சந்தானம் காமெடியில் இளநீர் ரயில் ஜன்னலுக்கு வெளியே சிக்கிக்கொள்வது போல இளைஞர் ஒருவர் சிரமப்பட்டு அதை மீட்ட காட்சிகள் வைரலாகி உள்ளது.
ரயிலில் பயணித்த இளைஞர் ரயிலின் ஜன்னலில் சிக்கிய இளநீரை மீட்டெடுக்க மேற்கொண்ட அதிரடி முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ரயில் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரின் இளநீர் எதிர்பாராதவிதமாக ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
அதை எடுக்க அவர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. இதைப் பார்த்த அருகில் அமர்ந்திருந்த பெண், அந்த இளைஞரின் முயற்சியைக் கண்டு ஏளனமாகச் சிரித்துள்ளார். இது அந்த இளைஞரின் ஈகோவை சீண்டிப் பார்க்கவே, அவர் அந்த இளநீரை மீட்டே தீருவது என முடிவெடுத்தார்.
தனது கழுத்தில் இருந்த சால்வை மற்றும் தலையில் இருந்த தொப்பியைத் தூக்கி எறிந்தவர், முழு பலத்தையும் திரட்டி மீண்டும் இழுத்தார். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ஜன்னலில் சிக்கியிருந்த இளநீரை வெற்றிகரமாக உள்ளே இழுத்து எடுத்தார்.
பின்னர், அந்தப் பெண்ணிடம் வெற்றிக் களிப்புடன் அதை காட்டி, அவருக்கு இளநீரை குடிக்கக் கொடுத்தார். இந்த காட்சியை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
video link: https://x.com/i/status/2031585571555115032
















