தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து வரும் 17-ம் தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து,…
தமிழகம் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், போதைப்பொருட்களின் கேந்திரமாகவும் மாறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள இபிஎஸ்,
இதனைத் தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 17-ம் தேதி மாபெரும் கண்டனப் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
















