மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் மத்திய துறைமுகம் கப்பல்கள் சிறப்பு செயலர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் இறந்துவிட்டதகவும் ஒருவரை காணவில்லை எனவும் தெரிவித்தார்.
4 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
















