கடந்த ஆண்டு வரை, தனது பிறந்தநாளுக்கு, சமூக வலைத்தளங்களில் தானே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் திமுக அமைச்சர் அண்ணன் திரு. வேலு அவர்கள். இந்த ஆண்டு புது அவதாரம் எடுத்திருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் அவருக்கு தனது பிறந்தநாளை, மக்கள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவரது சொந்தக் கட்சிக்காரர்கள் கூட, அவரது பிறந்த நாளை மறந்து போய் விடுவதால், அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த, விதவிதமான ராஜதந்திரங்களைப் பயன்படுத்துவார். அதில் ஒன்றுதான் இது என கூறினார்
நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது என கூறினார்
மேலும் மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் பாதிக்கப்படும்போது, அதன் விளைவு அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். ஆனால், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அரசு, அதற்கான தீர்வை ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என தெரிவித்தார்
ஒருபுறம், முதலமைச்சர் ஸ்டாலின் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று கூறிக் கொண்டிருக்கையில், அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டு, தனது பிறந்த நாள் விளம்பரத்துக்காக, பொதுமக்களிடையே வீண் பீதியை ஏற்படுத்துவதை அண்ணன் திரு. வேலு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எதுவுமே தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்ததைப் போல, கிரிக்கெட்டில் எத்தனை கோல் அடித்தார்கள் என்ற திமுகவினரின் வழக்கத்தை, இது போன்ற தருணங்களில் காட்டுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
















