தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 நாட்களாகியும், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், திருச்செந்தூர் – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் அருகே கடந்த 10ம் தேதி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சம்பவம் நடைபெற்று 4 நாட்களாகியும் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு ஆறுமுகநேரி அருகே திருச்செந்தூர்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த டிஎஸ்பி மகேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
















