திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த கோட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது.
குருசாமி பள்ளம் பகுதியில் அரசு தரிசு நிலத்தில், சில மாதத்திற்கு முன்பு 60க்கும் மேற்பட்டோர் தகரம் அமைத்து குடியேறியனர்.
இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், அரசு தரிசு நிலத்தில் வெளியேற ஒரு மாதம் அவகாசம் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக, பாஜக, ஐஜேகே உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்
















