நேபாளத்தில் கோயில் யாத்திரைக்காக சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் புகழ்பெற்ற மனகாமனா இந்து கோயிலுக்கு, இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்றிருந்தனர்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உட்பட ஏழு தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் பொள்ளாச்சி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முத்துக்குமார் , அண்ணாமலை, மீனாட்சி, சிவகாமி, விஜயாள், மீனா மற்றும் தமிழரசி என்பது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி ஒன்பது பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
















