தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என IANS – MATRIZE நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தலையொட்டி IANS – MATRIZE நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆளும் திமுக கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 114 முதல் 127 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், 6 முதல் 12 இடங்களைப் பிடித்து ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.
















