கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் முன்வராததால் கடுப்பாகிய சபாநாயகர் காதர் வெளிநடப்பு செய்தது, காங்கிரஸ் அரசின் வெட்கக்கேடான நிலையை வெளிக்காட்டுவதாக தமிழக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
நான் எப்படி அவையை நடத்துவது? அமைச்சர்கள் பதிலளிக்கும் வரை கூட்டத்தொடரை நடத்த முடியாது என்று சொல்லி கடும் கோபத்துடன் சபாநாயகர் வெளியேறியதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். பின்னர், முதலமைச்சர் கெஞ்சிக் கூத்தாடி சபாநாயகரை அவையை நடத்தும்படி கேட்டுக் கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத்தனத்திற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
















