மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் மகத்தான தோற்றமும் சுயராஜ்யத்தின் விதையும் என்ற நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நூலினை தொகுப்பாசிரியர்கள் என்.பாலாஜி, என்.சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் தஞ்சாவூர் அரச குடும்பத்தின் தலைவர் ஸ்ரீமந்த் பாபாஜி ராஜா போன்ஸ்லே பங்கேற்று நூலினை வெளியிட்டார். தொடர்ந்து அதன் முதல் பிரதியினை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் மனிதத் தேனி சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்ரீமந்த் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சிறப்புமிக்க இந்த நூலினை இளைஞர்கள் படித்து தேசப்பற்றை வளர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பின்னர் பேசிய மனிதத் தேனி சொக்கலிங்கம் இந்த நூல் தேசப்பற்று மற்றும் சுயமரியாதையின் வடிவத்தை எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தொகுப்பாசிரியர் பாலாஜி, கருவிலேயே ஒரு வீரன் உருவாகிறான் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
















