சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு மாணவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி பகுதியைச் சேர்ந்த இளமாறன் என்பவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழலில், உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளமாறனின் தந்தை சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம் சிங்கபுணரி மயானத்திற்கு சரவணனின் சடலம் கொண்டுவரப்பட்ட நிலையில், தந்தையின் உடலுக்கு மகன் இளமாறன் இறுதிச்சடங்குகளை செய்தார்.
பின்னர், மயானத்திற்கு வந்த சிங்கம்புணரி பேரூராட்சி துணை சேர்மன் செந்தில்குமார், மாணவர் இளமாறனை காரில் ஏற்றி கொண்டு பள்ளிக்கு அழைத்து சென்று தேர்வு எழுத செய்தார்.
















