ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணித்த நந்தா தேவி என்ற மேலும் ஒரு கப்பல் குஜராத் துறைமுகம் வந்தடைந்தது.
வளைகுடா நாடுகளில் இருந்து நந்தா தேவி என்ற சரக்கு கப்பல், சுமார் 47 ஆயிரம் மெட்ரிக் டன் வரையிலான திரவ எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு இந்தியா நோக்கி புறப்பட்டது.
இந்த கப்பல் ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்து, குஜராத்தின் வதினார் துறைமுகம் வந்தடைந்தது.
















