ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவரான ஜோ கென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானால் அமெரிக்காவுக்கு தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே ஈரானுக்கு எதிராக போரில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ட்ரம்ப்பின் வெளியுறவு கொள்கையை ஆதரிக்கிறேன் என்றும் ஜோ கென்ட் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், ஜோ கென்ட் பலவீனமான அதிகாரி என்றும், அவர் பதவி விலகியது நல்ல விஷயம் என்றும் கூறியுள்ளார்.
















