திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளே பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் அவலநிலை நிலவுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளே பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் அவலநிலை உள்ளதாக தெரிவித்தார்.
உலக மகளிர் தினத்தன்று 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், 2021 முதல் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சுமார் 40,000 வரை அதிகரித்துள்ளதாகவும் சாடினார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















