தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இநிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நிலவிய இந்த அதீத வெப்பத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், தேனி, போடி, ஆண்டிபட்டி , சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















