கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தார்வாட் மாவட்டத்தின் கல்கட்கி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், நகரின் பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் குவிந்து கிடந்தன.
சாலைகளில் பனிக்கட்டிகள் கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளின் வாசல்களிலேயே பனிக்கட்டிகள் மலை போல குவிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
















