செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யூரில் இருளர் சமூகத்தை சேர்ந்த 6ம் வகுப்பு சிறுமியை, திமுக பிரமுகர் சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிததனர். எனினும் புகாரளித்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் திமுக நிர்வாகி சிவா மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தநிலையில் தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் வாக்குமூல வீடியோ எடுத்த வேலு என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
















