சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி நக்கீரன் ஊடகம் அவதூறு செய்திகளை வெளியிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நக்கீரன் வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்கக் கோரியும், வருங்காலங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை தடுக்க கோரியும் ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஈஷா மற்றும் சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை மனதார வரவேற்பதாக ஈஷா அறிக்கை வெளியிட்டுள்ளது.
















