சேலம் மாவட்டம், எடப்பாடியில் விடிய விடிய பெய்த கனமழையால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. ‘
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், எடப்பாடியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
















