தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதால் முழு ஆண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுமோ என கேள்வி இருந்த நிலையில், தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
















