முதல்வராகவும், பிரதமராகவும் நீண்டகாலம் அரசுப் பதவி வகித்த தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ள தருணத்தில், அவரது அர்ப்பணிப்பு குறித்த நெகிழ்ச்சியான தகவல்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, கடந்த 24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தேசத்திற்காக பணியாற்றியவர் பிரதமர் மோடி என்றும்,
மூன்று முறை குஜராத் முதலமைச்சராகவும், மூன்று முறை நாட்டின் பிரதமராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையே காட்டுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், மோடி யுகம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அமித்ஷா, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள பிரதமர் மோடியின் இந்த 24 ஆண்டுகாலப் பயணம், சேவை மற்றும் கடின உழைப்பின் மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
















