உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம நவமியை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராம நவமி பெருவிழா வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராம நவமியன்று ராம பகவானுக்கு அர்ப்பணிப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த குடும்பத்தினர் கலைப் படைப்பை வடிவமைத்துள்ளனர். அதன்படி 1 லட்சத்து 21 ஆயிரம் நெல் மணிகளை கொண்டு ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் ஆகியோரை சித்தரிக்கும் விதமாக தனித்துவமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கலைப் படைப்புகள் அயோத்தியை வந்தடைந்துள்ளன.
















