நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் ராஜேஷ் மீதே, திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்பவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும், திமுகவினர் எல்லைமீறிப் போய்க் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தெருத்தெருவாக ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் தமிழக மக்கள் இனியும் திமுகவை மன்னிப்பதாக இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
















