படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி வழங்க இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு சிம்புவை வைத்து படம் எடுப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவரிடம் கெளதம் வாசுதேவ் மேனன் நான்கு கோடியே இருபத்து ஐந்து லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.
ஆனால் படம் டிராப் ஆனதால், பணத்தை திரும்ப கேட்டு தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கெளதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
















