சென்னை திருமங்கலம் அருகே பல ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த உறவினரான திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேற்கு திருமங்கலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனியார் அறக்கட்டளை ஒன்றில் நடனம் பயின்று வருகிறார்.
அந்த நடன வகுப்பில் சிறுமிக்கு GOOD TOUCH மற்றும் BAD TOUCH குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்கு திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, உறவினரான பரத் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி நடன வகுப்பை நடத்தி வரும் அறக்கட்டளை நிர்வாகியிடம் தெரிவிக்க, அவர் சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பரத் திமுக வழக்கறிஞர் பிரிவு பகுதி அமைப்பாளராக உள்ளதும், கடந்த 5 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















