திருவாரூரில் சாலையில் மூன்றாண்டுகளாக நிலவும் பாதாள சாக்கடை கழிவு நீர் பிரச்சினையை நகராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் தேரோடும் நான்கு வீதிகள், கமலாலய குளக்கரை, விஜயபுரம் கடைத்தெரு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி சாலைகளில் வழிந்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
















