யூதர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் லீஜ் நகரில் உள்ள ஒரு யூதத் தேவாலயத்தில் இம்மாத தொடக்கத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனை ஒரு ‘யூத எதிர்ப்பு’ தாக்குதல் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெல்ஜியத்தின் அண்டை நாடான நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள தேவாலயத்தில் தீவைப்புச் சம்பவமும், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூதப் பள்ளி ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக, ஐரோப்பா முழுவதும் யூத சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் 400% வரை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து பெல்ஜியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தியோ ஃபிராங்கன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து யூத சமூகத்தினர் இடையே நிலவும் அச்சத்தைப் போக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திடீர் ராணுவக் குவிப்பு பெல்ஜிய அரசியலில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
















