சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!
Mar 25, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தின் அடையாளச் சின்னமாக விளங்கிய மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு, சீரமைப்பு பணி என்ற பெயரில் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுதொடர்பான முழு விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவியும், அதன் முன்னே கம்பீரமாக நின்றிருந்த அந்தப் பாதுகாப்பு வளைவும்தான். நூறு ஆண்டுகளைக் கடந்தும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நின்ற அந்த வரலாற்று அடையாளம், தற்போது சீரமைப்புப் பணி என்ற பெயரில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ஏ. அண்ணாமலை செட்டியார் என்பவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வளைவு, வெறும் அழகுக்காகக் கட்டப்பட்டதல்ல. அது ஒரு துல்லியமான பாதுகாப்பு அளவுகோலாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் விழும் தண்ணீர் இந்த வளைவைத் தாண்டி வரும்போது, அது குளிக்க ஆபத்தான அளவு எனக்கருதப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்தன.

1992-ல் ஏற்பட்ட கோரமான வெள்ளம் உட்பட, கடந்த ஒரு நூற்றாண்டில் சந்தித்த பல்லாயிரக்கணக்கான வெள்ளப் பெருக்குகளிலும் இந்த வளைவு ஒரு சிறு விரிசல் கூட இன்றி நிலைத்து நின்றது. இந்நிலையில், சுற்றுலாத் துறையின் சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குற்றாலத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அருவிக்கரையை விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் குளிக்கும் வகையில் தரைத்தளத்தை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பழைய வளைவை அகற்றிவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வளைவு மற்றும் ஆழமற்ற குளம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் ஊடகங்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல், நூறு ஆண்டு கால உறுதியான வளைவை இடித்தது துரதிஷ்டவசமானது என்று முன்னாள் எம்எல்ஏவும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வேதனை தெரிவித்துள்ளார்.

அருவி முன் அமைக்கப்பட்டுள்ள தடாகம் என்றழைக்கப்படும் குழியை மூடினால், வெள்ள நீர் ஆற்றுக்குள் செல்லாமல் பெண்கள் குளிக்கும் பகுதி வழியாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அப்பகுதிவாசிகள் எச்சரிக்கின்றனர். மேலும், பழைய வளைவு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது என்றும், இனி வரும் புதிய கட்டமைப்பு அந்தத் தரத்துடன் இருக்குமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் வாசிகள்…

புதிதாக அமையவுள்ள வளைவு, இடிக்கப்பட்ட வளைவை போன்று, அதே பலத்துடனும், தரத்துடனும் அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த குற்றாலப் பிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது…..

Tags: courtallam main fallsCourtallam falls iconic symbolhistorical landmarkS.A. Annamalai ChettiarcourtallamKaraikudirenovation work
ShareTweetSendShare
Previous Post

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

Related News

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies