சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் தொல்லை தந்ததாக கும்பமேளா புகழ் மோனாலிசா குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே உத்தர பிரதேசத்தில் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா மூலம் புகழ்பெற்றார்.
தனது கண்களால் அனைவரையும் கவர்ந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. கேரளாவில் சினிமா படப்பிடிப்பில் இருந்த போது தனது காதலன் முகமது பர்மான்கானை திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மோனாலிசா, தனது முதல் சினிமா பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் படப்பிடிப்பின் போது பலமுறை தவறான நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நேபாளம், டேராடூன் ஆகிய இடங்களில் பலமுறை தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் என்றும் அதை தான் எதிர்த்ததாகவும் மோனாலிசா கண்ணீர் மல்க கூறினார்.
இது குறித்து தனது குடும்பத்தினரிடம் அப்போதே தெரிவித்தேன் என்று கூறிய மோனாலிசா, முதல் படம் என்பதால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு பணமே குறிக்கோளாக இருந்ததாக தெரிவித்தார்.
சினிமால் நடிக்க வைக்கிறேன் என்று கூறி சினிமாவின் பெயரை பயன்படுத்தி மோசமான செயல்களை செய்கிறார் என்றார்.
தங்களுக்கு பல இடங்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன கூறிய மோனாலிசா, தனது சொந்த ஊருக்கு செல்ல அஞ்சுகிறேன் என்றும் இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புகிறேன் என்றும் கூறினார்.
















