சென்னை மதுரவாயல் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1.13 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அளவுக்கு அதிகமான பணத்தை எடுத்து செல்பவர்களை பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆலப்பாக்கம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ஒரு கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது, தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். டாஸ்மாக் நிறுவனத்திலும், ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்களிடமும் இருந்து வசூல் செய்யப்பட்ட பணம் என கூறப்பட்ட நிலையில் ஆவணங்களை சமர்பித்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
















