திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் கதவு அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி நேற்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் கருவறையின் உள்ளே இரண்டு விளக்குகள் ஏற்றப்பட்டு கோயில் கதவுகள் சாத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கபட்டது. பொங்கலிடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
















