சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி, தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் களமிறங்குகிறார்.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் ஆர்ஜூனாவும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தனி தொகுதியில் ராஜ்மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திட்டக்குடியில் ராஜசேகர், சைதாப்பேட்டையில் அருள்பிரகாசம், ஆயிரம்விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகரன் போட்டியிடுகின்றனர்.
இதே போல, குமாரபாளையத்தில் விஜயலட்சுமி, லால்குடியில் கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தொகுதியில் சதய்பாமா, கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவும் போட்டியிடுகின்றனர்
ஆர்.கே.நகரில் மரிய வில்சன், மதுரவாயல் தொகுதியில் ரேவந்த் சரண், ஆவடி தொகுதியில் ரமேஷ்குமார், துறைமுகத்தில் சினோரா அசோக், சேப்பாக்கம் தொகுதியில் செல்வம் போட்டியிகின்றனர்
அண்ணா நகரில் ராம்குமார், விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன், வேளச்சேரியில் குமார், சோழிங்கநல்லூர் தொகுதியில் ECR சரவணன், ஆலந்தூரில் ஹரிஷ் போட்டியிட உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தென்னரசு, பல்லாவரம் தொகுதியில் சரத்குமார், செங்கல்பட்டு தொகுதியில் தியாகராஜனும் போட்டியிடுகின்றனர்.
















