ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.
இந்நிலையில், ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரையாக விதவிதமான காவடிகளைச் சுமந்து பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் படிப்பாதையில் செல்வதற்காக பழைய குடமுழுக்கு மண்டபம் வழியாக புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, வரிசையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மலையேறிச் சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















