நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு விவகாரத்தில் தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்பி ரத்தினவேல், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், திமுகவுக்கு ராஜசேகர் என்றாலே பிடிக்காது என்றும், தற்போது திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதியில் இரண்டு ராஜசேகர்கள் போட்டியிடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
















