கடலூர் அருகே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல்சிற்பங்கள் அமைத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தினையும், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
100 சதவீத வாக்குப்பதிவினை நிறைவேற்றிடும் விதமாக ரிட்லி ஆமை அமைப்பில் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
















