முதல் நாளிலேயே கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலினும், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினும், தவெக தலைவர் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இருவரும் அந்தந்த தொகுதியில் பரப்புரையை தொடங்கினர்.
















