தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதிக்கு வருகை தந்த திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் கூட்டத்தை கூட்டியதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, பொன்.கௌதம சிகாமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















